Thursday, May 7, 2009

உன்னோடு வாழத்தானே உயிர் வாழ்கிறேன்

உன்னைப்பற்றி எழுதவென
வார்த்தைகள் தேடினேன்
மெல்லமாய் அருகில் வருகிறாய்


தள்ளிப்போ என சொல்லி
எழுதுகோல்களை நகர்த்தினால்
கைகளை பற்றிக் கொள்கிறாய்


அதிகமாய் எழுதாதே
கண்படும் என்கிறாய்
"கண்பட்டதால் தானே காதல்"
சொல்லி சிரிக்கிறேன்


எதற்கு இந்த கிறுக்கல்
கேட்டு பேனாவை பறிக்கிறாய்
நீ எனக்கு மட்டும்
ஒப்பந்தம் இது என்றேன்


அடிமை சாசனம் தருகிறேன் என்று
அர்த்தமாய் அருகில் வருகிறாய்
விழிகளில் விழுங்கிக்கொண்டாய்
வெறுமையாய் கடதாசி காற்றில்!

0 comments: