ஒற்றை ரோஜாவுடன்
கால் கடுக்க காத்திருக்கவில்லை நீ!
காத தூரம் போக
கெஞ்சி கொஞ்சியதில்லை நீ!
காலில் முள்படும் என்று
பாதையை திட்டியவனில்லை நீ!
பாதி குளிர்களியை
பறித்து உண்டதில்லை நீ!
விடிய விடிய குறுந்தகவல்
அனுப்பவில்லை நீ!
வேலை நேரத்தில் ஒன்றே ஒன்று என
முத்த சத்தம் கோரியதில்லை நீ!
ஆனால்
கண்களில் கண்ணீர் கண்டு
கைக்குட்டையானது உன் விரல்கள்!
துயரம் வரும் போது
சாய்ந்து கொள்ள தந்தாய் உன் தோள்!
தனிமையில் துவண்ட போது
கோர்த்துக் கொண்டது உன் கைகள்!
பரீட்சை நேரத்து கட்டாய உறக்கமும்
விடிகாலை விழிப்பும் உன் அழைப்பில்!
நோய் கண்ட போது
மருந்தாய் இருந்தது உன் பார்வை!
Wednesday, July 1, 2009
ஆனால் நீ
Posted by Thenie at 8:08 AM 2 comments
Subscribe to:
Posts (Atom)