Wednesday, August 26, 2009

நாளை உலகம் அழியுமாம்

கால்கள் நடை
போட்டனநாம் கைகோர்த்து
காதல் பயணம் செய்த பாதைகளில்!
நீ பறித்து அணிவித்த
போகன்விலா மலர்
அதிக அழகாய் இருந்தது இன்று!
கடல் அலைகளின்
காதல் முயற்சி
ஜெயிக்குமெனஉள்ளம் சொல்கிறது இன்று!
நீ கட்டிய மணல் மாளிகையில்
மகாராணியாய் நானும்
காவலனாய் நீயும் காதல் செய்கிறோம் இன்றும்!
உன் தோளில் கை பத்தித்து
தாண்டிய தண்ட வாளங்களில்
தடுக்கி விழாமல் நடக்கிறேன் உன் நினைவில்!
ரயில் சில்லுகளின் நசுக்கி
நீ செய்த நாணய மோதிரம்
விரலினை அழுத்தியது உன் நினைவு போல!
உன்னோடு சண்டை போட்டு
உண்டது தொண்டையில் சிக்கியது
யாரோ கடித்து வீசிய சோளம் கண்ட போது!
வீசும் தென்றல் கூட
உன் சுவாசத்தைகொண்டு வந்தது
கத கதப்பாய்!
உன்னோடு நான் இருந்த
அத்தனை நொடிகளையும் கோர்த்து
மாலை செய்கிறேன்!
நாளைக்குள் நீ வருவாய்
நினைவு மாலை சூட்டியே
உனை மூர்ச்சையாக்குவேன்!
நாளை உலகம் அழியுமாம்
அழியட்டுமே எனக்கென்னநாம் தான்
யுகம் கடந்து வாழ்வோமே காதலுடன்!

பெண் குழந்தை


தலை சுற்றியது
வாந்தி உயிர் எடுத்தது
கருதான் என்று முடிவானதும்
வலிகளை ஏற்க துணிந்தது உடல்
கண் இப்படி மூக்கு இப்படி
சிரிப்பு இப்படி என
பிஞ்சினை நெஞ்சில் நிறுத்தியது
உருவம் இல்லாத குழந்தை
ரோஸ் நிற உடையும்
தழுவல் நடையும்
கொஞ்சும் சிரிப்பும்
கொலுசுக் கால்களும்
பெண் குழந்தையே கனவில்
ஆசையாய் காத்திருந்து
வலிகளைப் பொறுத்து
தேவதையைக் கையில் வாங்கியதும்
வலி மறைந்தது அதன் அழகில்
பெண்தானா உனக்கும்
நமக்குத்தான் கொடுப்பினையே இல்லை
அம்மா சொன்ன போது
வலி அப்போது தெரிந்து
என் பிறப்புக்காய்!

தேவை

வக்கணையாய் பேசுகிறார்
வேளாண்மைக்கு ஆலோசனையும்
மீள இருப்புக்கு உத்தர வாதமும்!
கலையா உடை உடுத்தி
குளிர்க் காற்றும் வாங்கி
மக்கள் நலம் பேசுகிறார்களாம்!
அரை டம்ளர் தண்ணிக்கு
முழு நாள் காத்திருக்கும்
அந்த மனிதருக்கு வசந்தம் எங்கே?
நோய் முற்றினாலும்
ஆங்கே நாதியில்லை
அமரர் ஊர்தியில் இடமும் இல்லை!
கொடுத்த பால் நிறையும் முன்னே
பின் புறத்தில் ஈரம் காட்டும்
பச்சைக் குழந்தைக்கு என்ன வழி?
வானம் பொத்துக் கொண்டால்
தறப்பால் தாங்குமா
உடலை அணையாக்கும் நிலை மாறுமா?
உச்சி வெயில் வேளையில்
பதிய வரச்சொல்லி
மல்லிகள் அழகு பார்ப்பது தீருமா?
உப்பும் உரைப்பும் இல்லா
வெறும் பச்சைத் தண்ணி குடித்து
எத்தனை காலம் உயிர் தாங்கும்?
வசந்தம் வருமாம்
பாதை போடுதலாம்
நீர்ப்பாசனமாம் ரயில் பாதையாம்!
புதிய நிர்மானமாம்
விவசாய விருத்தியாம்
இன்னும் அபிவிருத்தியாம் அங்கு!
எதுவும் வேண்டாம்
உடனே தேவை சுடுகாடு
மொத்தமாய் எம்மை புதைத்துவிடு!