Thursday, May 7, 2009

உன்னை ரசிக்கிறேன்

திரும்பிப் பார்த்தால்
திரும்பி வருவேன்
திரும்ப திரும்ப அடம் செய்கிறாய் நீ
திரும்பிப் பார்க்காமலே
கூட வர மாட்டாயோ


மனம் கேட்கிறது
போ போ என்று துரத்தும் போதெல்லாம்
போகாமல் சிணுங்குகிறாய்
மீசை வைத்த குழந்தயாய்
அள்ளி அணைக்க கைகள் பறந்தாலும்
அரக்கியாகவே துரத்துகிறேன் உனை


பேசி முடித்த பின்னும்
மறந்துட்டேன் என நீ
அழைத்துப் பேசும் எதுவுமே
புதிதாக இல்லாத போதும்
தவிர்க்க முனைந்ததில்லை நான்


நடு நிசியில் ஆரம்பிக்கும்
காலை வணக்கம்
பகல் பன்னிரண்டிலும்
முடியாது தொடர்வது
உன்னால் மட்டுமே முடிகிறது

0 comments: