Tuesday, December 23, 2008

முதல் காதல்


மெல்ல தவழ்ந்து வரும்
தென்றல் போல
மனதை வருடிச் செல்லும்
புயலாய் மாறி சில நேரம்
சிதிலமும் செய்யும்

மலரிலும் அழகாய்
முட்கள் தோன்றும்
தேனிலும் அதிகமாய்
பாகற்காய் இனிக்கும்

பேசும் வார்த்தைகள்
மறந்து போக
பேசாத வார்த்தைக்காய்
மனம் தந்தி அடிக்கும்

அமாவாசை இருட்டிலும்
பௌர்ணமி தோன்றும்
வானவில்லும் உடலில்
ஆடையாக மாறிப் போகும்

பெண்ணுக்குள் வெட்கம்
மெல்லவே எட்டிப் பார்க்கும்
கன்னம் ரோஜாவாய்
சிறகுகள் முளைக்கும் முதல் காதல்..

5 comments:

ராஜேஷ் குமார் said...

nice one.

especially..
பெண்ணுக்குள் வெட்கம்
மெல்லவே எட்டிப் பார்க்கும்
கன்னம் ரோஜாவாய்
சிறகுகள் முளைக்கும் முதல் காதல்..

but its not applicable for you na :P

Thenie said...

but its not applicable for you na :P

ஏன்னா நாந்தான் குழந்தையாச்சே

ரணங்கள் said...

உங்களது முதல் காதல் சூப்பர்
அந்த வரிகளின் அர்த்தங்கள் ஆயிரம்
வளர்க்க தங்கள் பணி...

Thenie said...

நன்றி ரணங்கள்

சென்ஷி said...

புகைப்படம் மிக அழகு!