வீசப்படும் மலர்களிடையே கண் திறந்து பார்க்கிறாள் தேவி. செல்ல நடை தேவதைகள் கொலுசின் ஒலி நகைக்க வைக்கின்றன தூக்கம் வருது என தோள் சாய்கிறது குழந்தை முகம் வாடி மீண்டும் கல்லாகினாள் தேவி! ------------- அரிச்சுவடி வைத்திருந்தாள் அவள் இது ஆனா இது ஆவனா ஒவ்வொன்றாய் சொல்லி வந்தவள் பாதியில் மறந்துட்டேன் என்றாள் விடுபட்ட எழுத்துக்கள் தலை குனிந்து வெளியேறின! ----------------------------- வாணி விழா சின்ன பாதங்களில் சலங்கை கட்டி பெரிய கண்ணில் மையிட்டு தா தெய் தித் தெய் என கண்ணனை அழைக்கின்றாள் எம்மையும் அழைப்பாள் என மற்ற தெய்வங்கள் நிற்கின்றன வரிசையில்!
Wednesday, October 5, 2011
தேவதைகள்....2
Posted by Thenie at 3:38 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment