Wednesday, October 5, 2011

தேவதைகள்....2

வீசப்படும் மலர்களிடையே

கண் திறந்து பார்க்கிறாள் தேவி.

செல்ல நடை தேவதைகள்

கொலுசின் ஒலி நகைக்க வைக்கின்றன

தூக்கம் வருது என

தோள் சாய்கிறது குழந்தை

முகம் வாடி மீண்டும்

கல்லாகினாள் தேவி!

-------------

அரிச்சுவடி வைத்திருந்தாள் அவள்

இது ஆனா

இது ஆவனா

ஒவ்வொன்றாய் சொல்லி வந்தவள்

பாதியில் மறந்துட்டேன் என்றாள்

விடுபட்ட எழுத்துக்கள்

தலை குனிந்து வெளியேறின!

-----------------------------

வாணி விழா

சின்ன பாதங்களில்

சலங்கை கட்டி

பெரிய கண்ணில் மையிட்டு

தா தெய் தித் தெய் என

கண்ணனை அழைக்கின்றாள்

எம்மையும் அழைப்பாள் என

மற்ற தெய்வங்கள்

நிற்கின்றன வரிசையில்!


0 comments: