பட்டாம் பூச்சியின் அழகில்மலர்களின் மென்மையில்கடலின் அலையில்வானவில்லை வர்ணத்தில் காலம் போயிருக்கும்உனை காணாதிருந்திருந்தால்!வார்த்தைகள் கூட்டி தமிழின் நளினம் காட்டினாய் நீ!வேதனைகள் பழகிக் கொள்ளஎன் துன்பமாய் வந்தாய் நீ!இரவின் இருட்டில் விழிகள் பழகஓளியற்ற வழியாகினாய் நீ!என் முரட்டுப் பிடிவாதம் வரட்டு கௌரவம் அழித்தாய் நீ!தவிப்புகளை தனியனாக்கினாய்! இன்பங்களை மாறிலியாக்கினாய்!!என் பந்தங்களை உனக்காக்கினாய்! இறுதியில் நானே நீயாகினாய்!யாதும் ஆகினாய் நீ நானாகி!
Monday, June 29, 2009
யாதுமாகினாய் நீ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment